சினிமா துறையை பாதுகாக்க இரு வருடங்கள் நிவாரணம்

பிரதமர் தலைமையில் விசேட பேச்சுவார்த்தை

சினிமா துறையை பாதுகாக்கும் வகையில் இரண்டு வருடங்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் சினிமாத்துறை சார்ந்த பிரதிநிதிகளுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் சூழ்நிலை காரணமாக நாட்டில் சினிமா கைத்தொழில் துறை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை பாதுகாக்கும் வகையில் அரசாங்கத்தின் தலையீட்டுடன் சலுகைகள் வழங்கப்படவுள்ளன.

மேற்படி பேச்சுவார்த்தையில் சினிமாத்துறை தொழிற்சங்கங்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

அதன்போது களியாட்ட வரியை இரண்டு வருடங்களுக்கு 5 வீதத்தால் குறைப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 01/13/2021 - 09:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை