அனைத்து தோட்ட வைத்தியசாலைகளையும், அரசாங்கத்தின் கீழ் கொண்டுவர தீர்மானித்துள்ளதாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
இன்றைய (07) பாராளுமன்ற அமர்வின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் எழுப்பிய வாய் மூல கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அது தொடர்பில் அமைச்சரவை பத்திரமொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான அனுமதி கிடைத்ததும் குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
Thu, 01/07/2021 - 12:18
from tkn