எனக்கு குண்டு வைத்த புலிகளின் தலைவருக்கு என்ன நடந்தது?

மக்களுக்கு எல்லாம் தெரியும் என்கிறார் ஜனாதிபதி

நந்தசேன கோட்டாபய ராஜபக்‌ஷ அல்லது கோட்டாபய ராஜபக்‌ஷ என்ற எந்த ஆளுமைக்கு ஏற்பவும் செயற்பட தயார் என்ற போதும், எதிர்க்கட்சி போன்று மோசமான அரசியலுக்கு தான் தயாராக இல்லை என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

தவறு செய்தவர்களைத் தண்டிப்பது சட்டத்தின் கடமையாகும். அதில் தலையிட்டு முந்தைய அரசாங்கம் செய்ததைப் போல அரசியல் பழிவாங்க தான் தயாராக இல்லை என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். மக்களை தவறாக வழிநடத்தாமல் நியாயமான அரசியலில் ஈடுபடுமாறு எதிர்க்கட்சிக்கு அழைப்பு விடுத்தார்.

மகா சங்கத்தினர் உட்பட மக்கள் தான் ஜனாதிபதியாக  வருவதற்கு முன்பு இருந்த பாதுகாப்பு செயலாளரின் வகிபாகத்தை எதிர்பார்க்கின்றனர். பித்தளை சந்தியில், எல். ரீ. ரீ. ஈ பயங்கரவாதிகள் தன்னை இலக்குவைத்து தற்கொலை குண்டு தாக்குதலை நடத்தினர். அதைச் செய்த பயங்கரவாதத் தலைவருக்கு நேர்ந்த கதியை மக்கள் அறிவார்கள். நந்தசேன கோட்டாபய ராஜபக்ச அல்லது கோட்டாபய ராஜபக்ச என்ற எந்த ஆளுமைக்கு ஏற்பவும் செயற்பட தயார் என்ற போதும், எதிர்க்கட்சி போன்று மோசமான அரசியலுக்கு தான் தயாராக இல்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நேற்று முன்தினம் காலை அம்பாறை, உஹனவில் உள்ள லாவுகல கிராமத்தில் இடம்பெற்ற Òகிராமத்துடன் உரையாடல்Ó நிகழ்ச்சியில் பங்கேற்றபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். ஜனாதிபதி பங்கேற்ற ஐந்தாவது 'கிராமத்துடன் உரையாடல்“ நிகழ்ச்சி இதுவாகும்.

முதலாவது நிகழ்வு 2020 செப்டம்பர் 25 ஆம் திகதி பதுளை ஹல்துமுல்ல பிரதேச செயலக பிரிவில் உள்ள வேலன்விட கிராமத்தில் ஆரம்பமானது. இரண்டாவது நிகழ்ச்சி மாத்தளை மாவட்டத்தில் வில்கமுவ பிரதேச செயலக பிரிவில் உள்ள ஹிம்பிலியாகடவிலும் மூன்றாவது பலாங்கொடை இம்புல்பே, ராவணாகந்தவிலும் நான்காவது கெபிதிகொல்லேவ கனுகஹவெவ கிராமங்களிலும் நடைபெற்றன.

நேற்று முன்தின உரையாடலுக்கு அம்பாறை நகரிலிருந்து 24 கி.மீ தூரத்தில் உள்ள உஹன பிரதேச சபைக்கு உட்பட்ட லாவுகல கிராமம் தேர்வு செய்யப்பட்டது. மக்கள் சந்திப்பு வேரெங்கடகொட லாவுகல ஆரம்ப பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. உஹன, தமன, கலபிடகல, கொனாகொல்ல, பதியதலாவ, தெஹியத்தகண்டிய, மஹியங்கனை, பண்டாரதுவ, மககண்டிய, பொக்கபெத்த உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் குறைகளை ஜனாதிபதியிடம் தெரிவிக்க வருகை தந்திருந்தனர்.

லாவுகல கிராமத்தின் பரப்பளவு 09 சதுர கி.மீ. ஊவா வெல்லஸ்ஸ கலவரத்தில் இருந்து தப்பிய 15 குடும்பங்களின் குடியேற்றத்துடன் இங்கு குடியேற்றம் ஆரம்பமானது. என்று கிராம மக்கள் கூறுகின்றனர். இது 231 குடும்பங்களையும் 783 மக்கள் தொகையையும் கொண்டுள்ளது.

Mon, 01/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை