பாடசாலை மாணவர் சிலரும் பங்கேற்பு
யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் 2 ஆம் நாளாக நேற்றும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந் நிலையில் யாழ்.இந்து கல்லூரி மாணவன் ஒருவரும் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைத்து அகற்றப்பட்டதை கண்டித்து மாணவர்கள் நேற்று முன்தினம் முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் சமூக போராட்டமாக மாறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Mon, 01/11/2021 - 06:00
from tkn