இடமாற்றம் கோரி யாழில் ஆசிரியர்கள் போராட்டம்

ஆறு வருடம் கஷ்டப் பிரதேசங்களில் சேவையாற்றிய ஆசிரியர்கள் தமக்கான இடமாற்றத்தை வழங்கக் கோரி மாபெரும் போராட்டத்தை நேற்று முன்னெடுத்தனர்.

யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக நேற்று (18) ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம், வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக நடைபெற்றது. இப் போராட்டத்தின்போது முடிந்தவரை வடமாகாண இடமாற்ற கொள்கையை அமுல்படுத்தவும் ஆசிரியர்களுக்கும் சமவாய்ப்பு வழங்கு போன்ற வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளை தாங்கியவாறு, தமது போராட்டத்தை முன்னெடுத்தனர்.

அதேநேரம், வடமாகாண ஆளுநர், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், இலங்கை ஆசிரியர் சேவை சங்கத் தலைவர் உட்பட கல்வி அமைச்சர் ஆகியோருக்கு மகஜர்களையும் கையளித்துள்ளனர்.

அந்த மகஜரில் ஒரு பிரதேசத்தில் அல்லது கல்லூரியில் தொடர்ச்சியாக சேவையாற்றுவதற்கு மூலம் ஏற்படக்கூடிய ஒரு தலைமை ஆசிரியர் தொழிலுக்கு பாதிப்புகளை ஏற்படுவதனால் பல்வேறுபட்ட பிரதேசங்களை பல்வேறுபட்ட சமூக பொருளாதார மற்றும் கலாச்சார சூழல்களிலுள்ள கல்லூரிகளில் சேவைக்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு பல்வேறு அனுபவங்களைப் பெற்றுக் கொண்டு தமது திறனை விருத்தி செய்வதற்கும் சகல ஆசிரியர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்

Tue, 01/19/2021 - 07:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை