அஞ்சலி செலுத்திய யாழ். பல்கலை மாணவர்கள்

நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையின் படகுடன் இந்திய மீனவர்களின் படகு மோதுண்ட சம்பவத்தில் உயிரிழந்த தமிழக மீனவர்கள் நால்வருக்கு யாழ்.பல்கலைக்கழகத்தில் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்.பல்கலைகழக  மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்றுக் காலை 10.15 மணியளவில் இந்த நிகழ்வு நடைபெற்றது. அஞ்சலி நிகழ்வின் இறுதியில் கண்டன அறிக்கை ஒன்றும் மாணவர்களால் வாசிக்கப்பட்டு ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது.

Thu, 01/28/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை