கல்முனை பிரதேசத்தில் தொற்று எண்ணிக்கை 900 ஐ தாண்டியது

அக்கரைப்பற்றில் 309; 296 பேர் குணமடைவு

கல்முனை சுகாதாரப் பிராந்தியத்தில் தொற்றுக்களின் எண்ணிக்கை 900 தைத் தாண்டியது. கல்முனைப் பிராந்தியத்தில் 903 ஆக தொற்றுக்கள் இனங்காணப்பட்டிருக்கின்றன என கல்முனை சுகாதாரப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் டாக்டர் சுகுணன் தெரிவித்தார்.

இப்பிராந்தியத்துள் வரும் அக்கரைப்பற்றுக் கொத்தணியில் இதுவரை 863 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதில் அக்கரைப்பற்று 309 தொற்றுக்கள் அடுத்ததாக கல்முனை தெற்கு 211, பொத்துவில் 77, அட்டாளைச்சேனை 88, சாய்ந்தமருது 54, ஆலையடிவேம்பு 36, இறக்காமம் 24, சம்மாந்துறை 27, கல்முனை வடக்கு 17, திருக்கோவில் 15, நிந்தவூர் 13, காரைதீவு 14 ,நாவிதன்வெளி 14 என தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கல்முனை மாநகரில் 282 அதேவேளை கல்முனை மாநகர எல்லைக்குள் கொரோனா எண்ணிக்கை 282 தொற்றுக்களாக அதிகரித்திருக்கிறது. கல்முனை தெற்கில் 211பேரும் சாய்ந்தமருதில் 54 பேரும் கல்முனை வடக்கில் 17 பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

சாய்ந்தமருதில் ஒரு மரணம் சம்பவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கல்முனையின் 11 கி.சே.பிரிவுகளில் முடக்கச் செயற்பாடு 09வது நாளாக அமுலில் உள்ளது.அங்கு இது வரை 21,543 கொரோனாப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.தனிமைப்படுத்தலில் 206 பேர் வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 6 மரணங்கள் சம்பவித்துள்ளதாக பணிப்பாளர் சுகுணன் மேலும் தெரிவித்தார்.

காரைதீவு குறூப் நிருபர்

Fri, 01/08/2021 - 08:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை