புதிய மெனிங் சந்தையில் 7 பேர் அடையாளம்

புதிய மெனிங் சந்தையில் 7 பேர் அடையாளம்-7 Tested Positive for COVID19 in Random PCR Test at Peliyagoda New Manning Market

பேலியகொடை புதிய மெனிங் சந்தையில் எழுமாறாக மேற்கொண்ட PCR சோதனையில் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்திற்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் இதனைத் தெரிவித்துள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் இதனை அறிவித்துள்ளது.

கடந்த 30ஆம் திகதி புதிய மெனிங் சந்தை வர்த்தகர்கள், உரிமையாளர்கள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட 120 பேருக்கு மேற்கொண்ட PCR பரிசோதனையில் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, அடையாளம் காணப்பட்ட 7 பேரையும் தனிமைப்படுத்தி, சிகிச்சைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sat, 01/02/2021 - 12:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை