மரக்கறி தோட்ட மின்சார வேலியில் சிக்கி 5 பிள்ளைகளின் தந்தை பலி

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்ட் ஜோன் டிலரி கிவ் மேற்பிரிவு தோட்டத்தில் மரக்கறி தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி 05 பிள்ளைகளின் தந்தையொருவர் மரணமடைந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் அந்தோனி சாமி வயது 62 என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று (08 )இடம்பெற்றுள்ளது. இளைஞர் ஒருவர் கூரையின் மீது ஏறி துணி காய வைக்கும் போது இந் நபர் மரக்கறி தோட்டத்தில் வீழ்ந்து கிடப்பதை கண்டுள்ளார். அதனை தொடர்ந்து பிரதேசவாசிகளிடம் தெரிவித்துள்ளார்.

பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,

தனது மரக்கறி தோட்டத்தை மிருகங்களிடமிருந்து பாதுகாப்பதற்காக மின்சார வேலியை சட்டவிரோதமாக பொருத்தியுள்ளார்.

ஒவ்வொருநாளும் தோட்டத்திற்கு செல்லும் போது மின்சாரத்தை துண்டித்துவிட்டு செல்வதாகவும் நேற்று அதனை துண்டிக்காது மறந்து சென்றதனால் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென பிரதேச வாசிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் நீதவானின் மேற்பார்வையின் பின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஹற்றன் விசேட நிருபர்

Sat, 01/09/2021 - 13:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை