உயிரிழந்த இந்திய மீனவர்கள் 4 பேருக்கு மட்டக்களப்பில் அஞ்சலி

இலங்கையின் கடல் எல்லையில் உயிரிழந்த நான்கு இந்திய மீனவர்களுக்கு (27)மட்டக்களப்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் இலங்கை கடற்பரப்பில் உயிரிழந்த இந்திய மீனவர்கள் நான்கு பேருக்கும் மலர் மாலை அணிவித்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அங்கத்தவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கே.சுரேஸ் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியதுடன் அஞ்சலி உரைகளும் நிகழ்த்தப்பட்டன. இங்கு உரையாற்றிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் சுரேஷ் கருத்து தெரிவிக்கையில், இந்திய இலங்கை எல்லையில் நடந்த துன்பியல் சம்பவத்தில் எமது தொப்புள்கொடி உறவுகளான நான்கு தமிழக மீனவர்கள் உயிரிழந்தமை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு துயர் சம்பவமாகும்.

இந்த மீனவர்கள் உயிரிழப்புக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறினார்.

வெல்லாவெளி தினகரன் நிருபர்-

Fri, 01/29/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை