விமான நிலையத்திற்குள் 3 மாதம் இருந்தவர் கைது

கொரோனா தொற்றுக்கு மத்தியில் விமானத்தில் பறப்பதற்கு பயப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக அமெரிக்காவின் சிக்காகோ விமானநிலையத்தில் தங்கியிருந்த ஆடவர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

36 வயதான ஆதித்யா சிங் என்ற அந்த ஆடவர் தமது அடையாள அட்டையை சமர்ப்பிக்கத் தவறியதை அடுத்து கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

தமது அடையாள அட்டையாக ஒரு அடையாள முத்திரியை காட்டியபோதும் அது விமானநிலைய செயற்பாட்டு முகாமையாளருடையது என்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த அடையாள முத்திரை கடந்த ஒக்டோபர் மாதம் காணாமல்போயுள்ளது.

சிங் விமானத்தில் செல்வதற்காக கடந்த ஒக்டோபர் 19 ஆம் திகதி லொஸ் ஏஞ்சல்ஸ் ஒஹார் சர்வதேச விமானநிலையத்திற்கு வந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விமானநிலைய ஊழியரின் அடையாள முத்திரையை கண்டெடுத்திருக்கும் அவர் கொரோனா காரணமாக வீட்டுக்குச் செல்லும் பயத்தில் விமான நிலையத்தில் தங்கி இருந்திருக்கிறார் என்று உதவி மாநில அரச வழக்கறிஞர் கத்லீன் ஹார்கடி தெரிவித்துள்ளார்.

ஏனைய பயணிகள் வழங்கும் உதவிகளை கொண்டு அவரால் அங்கேயே தங்க முடிந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Tue, 01/19/2021 - 12:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை