கொரோனா மரணங்கள் 300 ஐ நெருங்குகிறது

ஒரே நாளில்  07 பேர் மரணம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று மரணங்கள் 300ஐ அண்மித்துள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மேலும் 07 பேர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணமடைந்துள்ள நிலையில் மரணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 297 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அதேவேளை நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா வைரஸ் மரணங்களில் இருநூறு பேர் 60 வயதைக் கடந்தவர்கள் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் நேற்று முன்தினம் வரை 284 பேர் மரணமடைந்துள்ளனர்.  அவற்றில் 41 க்கும் 60 க்கும் இடைப்பட்டவர்கள் 72 பேர் என்றும் 10 வயதுக்கும் 40 வயதுக்கும் உட்பட்டவர்கள் 35 பேர் என்றும் பத்து வயதுக்கு குறைந்த ஒரு மரணமும் சம்பவித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் 07 பேர் மரணமடைந்துள்ளதுடன் அவர்கள் 07 பேரும் 61 க்கும் 76 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் அமைச்சு தெரிவித்தது.

அதற்கிணங்க கொழும்பு 06 பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய நபர் நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய நபர் கொழும்பு 13ஐச் சேர்ந்த 61வயது நபர், கொழும்பு சிறைச்சாலை தடுப்புக் காவலில் இருந்த 61வயது நபர்,

எண்டேரமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடைய நபர், கொழும்பு 6 பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடைய பெண்ணொருவர்,இரத்தினபுரி கல்கால்ல பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதுடைய பெண்ணொருவருமே கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர் என சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்தது.(ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 01/30/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை