காத்தான்குடியில் 25 நாட்களின் பின் வர்த்தக நிலையங்கள் திறப்பு

காத்தான்குடியில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில்  உள்ள வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்ட போதிலும் தனியார் கல்வி நிலையங்கள், மதரசாக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் போன்றன மறு அறிவித்தல்வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை இரவு இடம் பெற்ற காத்தான்குடி நகருக்கான கொவிட் 19தடுப்பு செயலணியின் கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள எட்டு கிராம சேவகர் பிரிவுகளுக்குள்ளும் சகல வர்த்தக நிலையங்களும் வழமை போன்று திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதுடன், கடைகளுக்கு வெளியில் கைகளை தொற்று நீக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளையும் சமூக இடைவெளியினை பேணுவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்வதுடன் கடைகளில் காணப்படும் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிந்திருத்தல்.

பாமசி தவிர்ந்த ஹோட்டல்கள் உட்பட அனைத்து வர்த்தக நிலையங்களும் இரவு 8.00மணியுடன் மூடப்படல் வேண்டும்.

ஹோட்டல்கள், பேக்கரிகள் மற்றும் உணவகங்கள் அனைத்தும் பொதி செய்து மாத்திரம் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, எந்த நிலையிலும் கடைகளுக்குள் இருந்து சாப்பிட எவரையும் அனுமதிக்கக் கூடாது.

வீடு மற்றும் கட்டுமானப்பணிகள் மற்றும் அதனோடு தொடர்புடைய அனைத்து நடவடிக்கைகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சலூன் கடைகளை திறப்பதற்கு மறு அறிவித்தல் வரை தடைசெய்யப்பட்டுள்ளது.

தனியார் கல்வி நிலையங்கள், மதரசாக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் போன்றன மறு அறிவித்தல்வரை மூடப்பட்டிருக்கும்.

கடற்கரை, ஆற்றங்கரை மற்றும் பொது விளையாட்டு மைதானம் போன்ற பொழுதுபோக்கு இடங்களில் கூடி நிற்பது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

மேற்படி தீர்மானங்கள் சகல வர்த்தகர்களும் கண்டிப்பாக பின்பற்றுவதோடு எமது ஊரில் அதிகமான பகுதி தற்போதும் முடக்கப்பட்ட நிலைமையிலேயே காணப்படுகிறது என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

Mon, 01/25/2021 - 13:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை