கொழும்பில் 24 மணி நேர நீர் வெட்டு

கொழும்பில் 24 மணி நேர நீர் வெட்டு-24 Hour Water Cut in Colombo 1-3 & 7-15

கொழும்பின் பெரும்பாலான பகுதிகளில் நாளை (23) முற்பகல் 9.00 மணி முதல் 24 மணி நேர நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு 01, 02, 03, 07, 08, 09, 10, 11, 12, 13, 14, 15 பகுதிகளில் நாளை சனிக்கிழமை (23) மு.ப. 9.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை 9.00 மணி வரையான 24 மணி நேரத்திற்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, சபை தெரிவித்துள்ளது.

கொழும்பில் பம்பலபிட்டி, கிருலப்பனை, நாராஹேன்பிட்டி, வெள்ளவத்தை, பாமன்கடை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவசர திருத்த வேலை காரணமாக, இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ள சபை, இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியத்திற்கு வருந்துவதாக தெரிவித்துள்ளது.

மேலதிக விபரங்களுக்கு 1939 எனும் இலக்கதிற்கு தொடர்பு கொள்ளுமாறு, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

Fri, 01/22/2021 - 11:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை