ஜனவரி 22 முதல் விமான நிலையங்கள் திறப்பு

அமைச்சர் நிமல்லான்சா தெரிவிப்பு

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட அனைத்து வணிக விமானங்களுக்காக ஜனவரி 22ஆம் திகதி தொடக்கம் விமான நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக அவதானம் செலுத்தி சுகாதார பிரிவுகளின் விசேட கண்காணிப்பின் கீழ் விமான நிலையங்களைத் திறக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஜனவரி 22ஆம் திகதியின் பின்னர் நாட்டிற்குள் வருவதற்கு அனைத்து வர்த்தக விமானங்களுக்கும் சந்தர்ப்பம் வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tue, 01/05/2021 - 07:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை