புதிய 200 பஸ்கள் கொள்வனவு செய்ய அனுமதி இ.போ.சவுக்கு

கொழும்பு மற்றும் நெரிசல் மிகுந்த நகர்ப்பகுதிகளில் நவீன வசதிகளுடன் கூடிய பொதுப் போக்குவரத்து சேவை மற்றும் வாகனங்களைத் தரித்து வைக்கக்கூடிய வசதிகளுடன் கூடியதாக ஆரம்பிப்பதற்கு வாகன ஒழுங்குபடுத்தல்கள், பஸ் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரத பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன உற்பத்தி இராஜாங்க அமைச்சு திட்டமிட்டுள்ளது.

அதற்காக தற்போது காணப்படும் பஸ்களைவிட மேலும் சொகுசு வசதிகளுடன் கூடிய குறுந்தூரப் போக்குவரத்து போக்குவரத்துக்குப் பொருத்தமான 200 பஸ்கள் கொள்வனவு செய்ய வேண்டிய தேவையுள்ளது. அதற்கமைய, அங்கீகாரம் பெற்ற உள்ளூர் கம்பனி மூலம் மட்டுப்படுத்தப்பட்ட உள்ளூர் போட்டி விலைமுறிக்கோரலைப் பின்பற்றி, உயர்ந்த ரக புதிய 200 பஸ்களைக் கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக போக்குவரத்து அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Wed, 01/13/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை