கொவிட்–19: பிரிட்டனில் உயிரிழப்பு புதிய உச்சம்

பிரிட்டனில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவும் சாதனை அளவுக்கு தினசரி கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  

கொரோனா தொற்றினால் கடந்த புதன்கிழமை பிரிட்டனில் 1,820பேர் உயிரிழந்துள்ளனர். இது நோய்த் தொற்றினால் அந்நாட்டில் பதிவான அதிகபட்சம் உயிரிழப்பு எண்ணிக்கையாகும். எனினும் ஒரு நாள் இடைவெளியில் இந்த எண்ணிக்கை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இந்த மாத ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்பட்ட முடக்க நிலை நோய்ப் பரவலை கட்டுப்படுத்துவதில் போதிய தாக்கம் செலுத்தவில்லை என்று விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.  

புதிய நோய்த் தொற்று சம்பவங்களிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த புதனன்று 38,905நோய்த் தொற்று சம்பவங்கள் பிரிட்டனில் பதிவாகியுள்ளன.  

நோய்த் தொற்றின் தீவிரத்தன்மை குறித்து தெரிவித்திருக்கும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பெரும் எண்ணிக்கையான தொற்றுச் சம்பவங்களால் மோசமான நிலையை எதிர்கொண்டிருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.  

பிரிட்டனில் வேகமாக பரவக்கூடிய கொரோனா தொற்றின் புதிய திரிபு ஒன்று அங்கு நிலைமையை மோசமடையச் செய்துள்ளது.

Fri, 01/22/2021 - 15:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை