கொவிட்–19: ஆஸியில் கட்டுப்பாடு அதிகரிப்பு

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கூடுதலான சமூக இடைவெளிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முகக்கவசம் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக 8 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மாநிலத் தலைநகர் சிட்னியின் நோர்தன் பீச்சஸ் பகுதியில் கடந்த மாத மத்தியில் வைரஸ் பரவ ஆரம்பித்தது. பாதிக்கப்பட்டோரில் கிட்டத்தட்ட 150 பேர் அந்த இடத்துடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளனர்.

சிட்னியின் இதர பகுதிகளிலும் வைரஸ் பரவும் அபாயமிக்க சிறிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இனிவரும் நாட்களில் அவற்றின் எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையே, விக்டோரியா மாநிலத்தில் புதிதாக மூவருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மூவரும் ஏற்கனவே வைரஸ் தொற்றும் அபாயமிக்க இடமாக அடையாளம் காணப்பட்ட மெல்பர்ன் நகர உணவகத்துடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளனர்.

Mon, 01/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை