உக்ரேனிலிருந்து மேலும் 189 சுற்றுலா பயணிகள் நேற்று வருகை

உக்ரேனைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளில் மேலும் சிலர் மத்தளை சர்வதேச விமான நிலையத்தினூடாக நாட்டுக்கு வந்தடைந்தனர்.  உக்ரேன் விமான சேவைகளுக்குச் சொந்தமான பி.எஸ்.6385ரக விமானத்தில் 189சுற்றுலாப் பயணிகள் இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளனர். 

சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வரும் திட்டத்தின் கீழ் இவர்கள் நாடு திரும்பியுள்ளனர் என்பதுடன், இந்நாட்டிற்கு வருகை தந்த 12வது உக்ரேன் நாட்டு சுற்றுலாக் குழுவினர் இவர்களாகும்.  இதேவேளை உக்ரேனிலிருந்து வருகை தந்திருந்த 178சுற்றுலாப் பயணிகள் மீண்டும் உக்ரேன் நோக்கி புறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அரசாங்கம் கடந்த 21 ஆம் திகதி முதல் விமான நிலையங்களை மீண்டும் திறந்துள்ளதோடு பல நாட்டு விமான கம்பனிகள் மீண்டும் விமான சேவைகளை ஆரம்பிக்க முன்வந்துள்ளன. 

Mon, 01/25/2021 - 12:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை