பொலன்னறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (29) தனியார் பஸ்சொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்துள்ளனர். பொலன்னறுவையிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த தனியார் பஸ் நேற்றுக் காலை 6.30 மணிக்கு புனானைப் பகுதியில் முன்னால் சென்றுகொண்டிருந்த வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டபோது வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த 13 பேர் படுகாயங்களுக்குள்ளாகினர்.
காயமடைந்தவர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர்களில் 03 பேரை மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வெல்லாவெளி தினகரன் நிருபர்
from tkn