தோட்டத் தொழிலாளர் சம்பள பேச்சுவார்த்தை ஜன.07இல்

சிலர் தனிமைப்படுத்தலில் உள்ளதால் ஒத்திவைப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் உள்ளடங்கிய சம்பளப் பேச்சுவார்த்தை ஜனவரி மாதம் ஏழாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

தோட்டத் தொழிலாளர்களுக்கான நலன்புரி திட்டங்கள் மற்றும் கூட்டு ஒப்பந்தத்தில் திருத்தம் தொடர்பில் நடைபெற்றிருந்த பேச்சுவார்த்தை இம்மாதம் 31ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் கடந்த (17) ஆம் திகதி  

கண்டியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.

இதனால் இந்த முக்கிய நிகழ்வில் கலந்து கொண்ட இ.தொ.கா பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான மருதுபாண்டி ராமேஸ்வரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சுயத்தனிமைப்படுத்த சுகாதார தரப்பு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சுயத்தனிமைப்படுத்தலில் இருந்த இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு தொற்று இல்லையென உறுதியானாலும் இன்னும் சிலருக்கு சுகாதார அறிக்கை கிடைக்கவில்லை.

இந்த நிலையில் 31ஆம் திகதி நடைபெறவிருந்த சம்பள பேச்சுவார்த்தையில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறி பங்கு கொள்வதை இ.தொ.கா.விளக்கியிருந்தது. அத்துடன் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வது கேள்விக்குறியாக இருந்து வந்த நிலையில் பேச்சுவார்த்தை எதிர்வரும் ஜனவரி 07 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இ.தொ.கா ஊடகப்பிரிவு தெரிவித்தது.

 

 

Fri, 01/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை