பெப். 01 - 04; சுகாதார விதிமுறைக்கமைய சுதந்திர தின கொண்டாட்டம்

சமய வைபவங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

இந்த முறை சுதந்திர தினக் கொண்டாட்டத்தை சுகாதார விதிமுறைகளுக்கு அமைய கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். ஊடக பிரதானிகளுடன்  நேற்று இடம்பெற்ற சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சுதந்திர தின கொண்டாட்ட மரியாதை அணிவகுப்பில் பற்கேற்கவிருக்கும் பாதுகாப்புத் தரப்பினருக்கு றெபிட் எண்டிஜன் பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டிருந்த ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, இந்த முறை சுதந்திரதினக் கொண்டாட்டத்தை குறைந்தளவினருடைய பங்கேற்புடன் நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி, பௌத்த, இந்து, இஸ்லாம், கத்தோலிக்க வழிபாட்டு நிகழ்வுகளை, அந்தந்த மத வழிபாட்டுத் தளங்களில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Wed, 01/20/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை