பிணவறையில் இருந்து எழுந்தவர் உயிரிழப்பு

கென்யாவில் பிணவறையில் இருந்து கடந்த வாரம் உயிர்பெற்று எழுந்த நபர் ஒருவர் உண்மையாக உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உடலைப் பதனப்படுத்த தயார்படுத்தும்போது அந்த ஆடவர் விழித்தெழுந்து கூச்சலிட்டதாக பிணவறை தொழிலாளர் ஒருவர் கடந்த வாரம் கூறி இருந்தார்.

நாட்பட்ட நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்ட 32 வயதான பீட்டர் கிகேன் என்ற அந்த ஆடவர் பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளார். தாம் உயிருடன் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று அவர் கடந்த வியாழக்கிழமை கென்யாவின் டெய்லி நேசன் பத்திரிகைக்கு குறிப்பிட்டிருந்தார். ‘இறைவனால் நான் எழுப்பப்பட்டேன்’ என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சம்பவம் கென்யாவில் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து இது குறித்து விசாரிப்பதற்கு உள்ளூர் நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Mon, 12/07/2020 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை