ஜனாஸாக்களை தகனம் செய்வதை பரிசீலிக்கவும்

பிரிட்டன் முஸ்லிம் கவுன்ஸில் கோரிக்கை

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் வலுக்கட்டாயமாகத் தகனம் செய்யப்படுகிறது. முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான இந்தத் தீர்மானத்தை அரசாங்கம் நிச்சயமாக மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரிட்டன் முஸ்லிம் கவுன்ஸில் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் அந்த கவுன்ஸிலால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரசாங்கத்தின் இத்தீர்மானம் இலங்கையில் வாழும் முஸ்லிம்களின் மத ரீதியான நம்பிக்கை மற்றும் உரிமை என்பவற்றைப் பாதிப்பதுடன் இது விடயத்தில் முன்வைக்கப்படும் விஞ்ஞானபூர்வமான முறைக்கும் எதிரானதாகக் காணப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வது கட்டாயமல்ல என்றும் அதனால் தொற்றுப்பரவல் ஏற்படலாம் என்பதற்கு விஞ்ஞானபூர்வமான ஆதாரங்கள் எவையுமில்லை என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்திருக்கும் நிலையிலும் கூட, இலங்கை அரசாங்கம் இவ்வாறானதொரு தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. எந்தவொரு அடிப்படைகளும் இல்லாத போதிலும் அரசாங்கம் இவ்வாறு செயற்படுவது, முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கான ஒரு உதாரணமாகவே நோக்கப்பட முடியும்.

எனவே அரசாங்கம் இத்தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யும் அதேவேளை, இது விடயத்தில் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

Tue, 12/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை