ராவல்பிண்டி பொலிஸ் நிலையம் அருகே குண்டுத் தாக்குதல்

- 25 பேர் காயம்

பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் காஞ்ச் மண்டி என்ற இடத்தில் பொலிஸ் நிலையம் அருகே கடந்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 25 பேர் வரை காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்தோரில் 22 பேர் மாவட்ட பொலிஸ் தலைமையக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாவும், மூவருக்கு அவ்விடத்திலேயே முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் மீட்புப் பணியில் ஈடுபட்டோர் தெரிவித்தனர். அங்கு மேற்கொள்ளப்பட்டது கைக்குண்டுத் தாக்குதலென ஆரம்பத்தில் கிடைத்த தகவல்கள் தெரிவித்தன. ஆனால் உடனடியாக அத்தகவலை உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக ராவல்பிண்டி நகர பொலிஸ் அதிகாரி மொஹமட் அஷான் யூனஸ் தெரிவித்தார். மேற்படி பொலிஸ் நிலையத்தின் அருகே கடந்த 10 நாட்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது குண்டுத் தாக்குதல் இதுவென்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த நான்காம் திகதியன்று நடந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் நால்வர் காயமடைந்திருந்தனர்.

 

Wed, 12/16/2020 - 10:52


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை