பிரான்சில் ஹெலி விழுந்து ஐவர் பலி

பிரான்சில் ஆறு பேருடன் சென்ற ஹெலிகொப்டர் ஒன்று ஆல்ப்ஸ் மலையில் மோதி ஐவர் கொல்லப்பட்டுள்ளனர்.

தனியார் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான இந்த ஹெலி மீட்பு நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டிருந்தபோதே பொன்விலார்ட் நகருக்கு அருகில் கடந்த செவ்வாய்க்கிழமை விழுந்துள்ளது.

விபத்துக்கான காரணம் உறுதி செய்யப்படாதபோதும் அங்கு நிலவிய மோசமான காலநிலையே காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அபாய அச்சுறுத்தல் சமிக்ஞையை எழுப்பிய விமானி ஹெலியில் இருந்து தப்பி உயிரைக் காத்துக்கொண்டுள்ளார். அவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு மீட்பு பணிகளுக்காக மூன்று ஹெலிகள் அனுப்பப்பட்டன. எனினும் பனிமூட்டம் காரணமாக விமானங்களுக்கு அந்த தளத்தை நெருங்க முடியவில்லை. கால் நடையாக அந்த இடத்திற்கு சென்ற மீட்பாளர்களே விமானியை மீட்டுள்ளனர்.

Thu, 12/10/2020 - 09:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை