'அசிதிசி' வெகுசன ஊடக புலமைப்பரிசில் வழங்கல் வைபவம் இன்று

அனைத்து ஊடகவியலாளர்களையும் அறிவு, திறன் மற்றும் அணுகுமுறைகளுடன் கூடிய தொழில்முறை வெகுசன ஊடகத் துறையொன்றை உருவாக்கும் நோக்கில் வெகுசன ஊடக அமைச்சினால் வருடாந்தம் செயற்படுத்தப்படுகின்ற “அசிதிசி” வெகுசன ஊடக புலமைப் பரிசில் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஊடகவியலாளர்களுக்காக புலமைப் பரிசில் வழங்கும் வைபவம் இன்று திகதி நடைபெறும்.

வெகுசன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் அமைச்சின் செயலாளர் ஜகத் பி. விஜேவீரவின் பங்கேற்புடன் இன்று மு.ப. 10.30 மணிக்கு அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறும்.

21ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ள பயிற்சிப் பாடநெறிகள் மூலம் ஊடவியலாளர்கள் தங்களது தொழில்முறை திறன்களை வளர்த்துக் கொள்ளவதற்காக வேண்டி ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட இலத்திரணியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களில் மூன்றாண்டுகள் சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்த, முழு நேர அல்லது பகுதி நேர அடிப்படையில் சேவையிலுள்ள 18-−55 வயதிற்குற்பட்ட அரசாங்க தகவல் திணைக்களத்தினால் ஊடகவியலாளர்களுக்காக வழங்கப்படுகின்ற ஊடகவியலாளர் அடையாள அட்டை பெற்றுள்ள ஊடகவியலாளர்கள், சுதந்திர ஊடகவியலாளர்கள், பிரதேச ஊடகவியலாளர்கள் மற்றும் இணைய ஊடகவியலாளர்களுக்காக திருப்பிச் செலுத்தப்படாத அடிப்படையில் இப்புலமைப் பரிசில் வழங்கப்படுகின்றது.

இளமாணி மற்றும் முதுமாணி பாடநெறிகளுக்காக ரூபா இரண்டு இலட்சம் (200,000) மற்றும், குறுகிய கால நெடுங்கால சான்றிதழ் பாடநெறி, டிப்ளோமா, உயர் டிப்ளோமா பாடநெறிகளுக்காக அதிகபட்சம் ரூபா ஒரு இலட்சம் (1,00,000) என்ற அடிப்படையில் இந்தப் புலமைப் பரிசில் தொகை வழங்கப்படுகின்றது.

இப்புலமைப் பரிசில்களை பெறுவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம், உயர் கல்வி பயிற்சி நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் ஊடகத் துறை தொடர்பான பாடநெறிகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.

எவ்வித கட்டணங்களும் அறவிடாமல் இலவசமாக வழங்கப்படுகின்ற இந்த புலமைப்பரிசில் திட்டம் மூலம் ஊடகவியலாளர்களுக்கு இருமுறை பயன்பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது. முதற் சந்தர்ப்பத்தில் தகைமை பெற்று ஐந்து வருடங்கள் கடந்த பின்னர் முதற் பாடநெறியை முழுமையாக நிறைவு செய்த ஊடகவியலாளர்களுக்கு இரண்டாவது தடவைக்காகவும் விண்ணப்பிக்க முடியும்.

புலமைப் பரிசில்களுக்காக தகுதிபெற்ற ஊடகவியலாளர்களுக்காக பாடநெறியின் தொடக்கத்தில் பாடநெறிக் கட்டணத்தில் 50% முதற் தவணையாகவும், மீதமுள்ள 25% பாடநெறியின் இரண்டாவது தவணையாகவும், மீதமுள்ள 25% பாடநெறியை நிறைவு செய்து சான்றிதழ் சமர்ப்பித்த பின்னரும் வழங்கப்படும்.

வெகுசன ஊடக அமைச்சின் செயலாளிரானல் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவினால் விண்ணப்பதாரிகள் நேர்முகப் பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

இம்முறை புலமைப் பரிசில்களுக்கு விண்ணப்பித்த அனைத்து ஊடகவியலாளர்களிலிருந்தும் தகைமையை பூர்த்தி செய்த அனைவர்களுக்குமாக இப்புலமைப் பரிசில்களை வழங்குவதற்கு வெகுசன ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி 85 ஊடகவியலாளர்களுக்கு இம்முறை புலமைப் பரிசில் வழங்கப்படவுள்ளது.

Tue, 12/22/2020 - 11:25


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை