வெனிசுவேல பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி மடுரோ கூட்டணிக்கு வெற்றி

எதிர்க்கட்சிகள் புறக்கணித்த

பிரதான எதிர்கட்சிகள் புறக்கணித்த வெனிசுவேல பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி நிகொலஸ் மடுரோவின் கட்சி மற்றும் அவரது கூட்டணி வெற்றியீட்டி இருப்பதாக ஆரம்ப முடிவுகள் தெரிவித்துள்ளன.

இதன்மூலம் நாட்டின் அரசியல் கட்டமைப்பு முழுவதும் மடுரோவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

80 வீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் மடுரோ கூட்டணி 67.6 வீத வாக்குகளை வென்றிருப்பதாக தேசிய தேர்தல் கௌன்சில் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகாரப் போட்டியில் இருந்து வந்த எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவைடோ இந்தத் தேர்தலை புறக்கணித்தார்.

குவைடோவை வெனிசுவேலாவின் சட்டபூர்வத் தலைவராக அமெரிக்கா உட்பட 50க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்தன.

புறக்கணிப்பை மீறி தேர்தலில் போட்டியிட்ட எதிர்க்கட்சியின் ஒரு தரப்பினர் 18 வீத வாக்குகளை வென்றுள்ளனர்.

எனினும் இந்தத் தேர்தலில் 31 வீத வாக்குப்பதிவே இடம்பெற்றிருப்பதாக தேசிய தேர்தல் கௌன்சில் தலைவர் இன்டிரா அல்பொன்சோ தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தத் தேர்தலை ‘மோசடியானது மற்றும் வெட்ககரமானது’ என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

‘சட்டவிரோதமான மடுரோ அரசு வெளியிட்டிருக்கும் தேர்தல் முடிவுகள் வெனிசுவேல மக்களின் விருப்பை பிரதிபலிக்கவில்லை’ என்று அவர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

277 ஆசனங்கள் கொண்ட வெனிசுவேல பாராளுமன்றம் 2015 தொடக்கம் எதிர்க்கட்சி கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது. சட்டம் நிறைவேற்றல் மற்றும் அரசின் வரவுசெலவு திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் செயற்பாடுகளை பாராளுமன்றம் மேற்கொண்டபோதும் 2017 இல் அதன் அதிகாரத்தை குறைக்கும் வகையில் ஜனாதிபதி மடுரோ தேசிய சட்டவாக்க சபை ஒன்றை அமைத்தார்.

மடுரோ அரசில் வெனிசுவேல பொருளாதாரம் நெருக்கடிக்கு முகம்கொடுத்திருப்பதோடு உணவு மற்றும் மருத்துவ பொருட்களுக்கு தட்டுப்பாடு உள்ளது.

வெனிசுவேலாவின் 4.5 குடியேறிகள் மற்றும் அகதிகள் உலகெங்கும் தஞ்சம் அடைந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

 

Tue, 12/08/2020 - 08:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை