வடக்கு பாடசாலைகள் இரு தினங்களுக்கு பூட்டு

சீரற்ற காலநிலை; ஆளுநர் தீர்மானம்

வட மாகாணத்தில் 4 மாவட்டங்களில் இன்றும் நாளையும் பாடசாலைகள் மூடப்படும் என்று மாகாண ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டப் பாடசாலைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்படுகிறது.

மாவட்டச் செயலாளர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக வடக்கு மாகாண ஆளுநரால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இரு தினங்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Thu, 12/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை