தமிழர் பிரதேசங்களில் தமிழ் மொழி அமுல்படுத்தப்பட வேண்டும்

அபிவிருத்தி திட்ட முன்னெடுப்புகளில்

தமிழர் பிரதேசங்களில் அரசாங்க திட்டங்கள் தமிழ் மொழியிலேயே அமுல்படுத்தப்பட வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று (17) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்திலேயே அரச அதிகாரிகளுக்கு கடற்றொழில் அமைச்சர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரினால், இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்படுகின்ற வேலைத் திட்டங்களுக்கான பெயர்கள் சிங்கள மொழிப் பெயர்களில் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

இத் திட்டங்கள் வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலும் சிங்கள மொழிப் பெயர்களிலேயே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இது தொடர்பாக சுட்டிக்காட்டிய அமைச்சர், மத்திய அரசாங்கத்தின் திட்டங்களை தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தும் போது இத் திட்டங்களின் பெயர்களை தமிழில் பயன்படுத்துமாறும் அது தொடர்பாக மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு தான் கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Fri, 12/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை