அனைத்து சுற்றுலா விடுதிகளும் இன்று முதல் திறக்கப்படும்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் சூழ்நிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு சொந்தமான அனைத்து சுற்றுலா விடுதிகள் மற்றும் சுற்றுலா முகாம்களும் இன்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அந்த திணைக்களம் தெவித்துள்ளது. அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம். ஜி. சி. சூரிய பண்டார அது தொடர்பில் தெரிவிக்கையில், டிசம்பர் மாதத்திற்காக மேற்படி சுற்றுலா விடுதிகளை முன்பதிவு செய்திருந்த சுற்றுலா பயணிகள் குறித்த தினத்தில் அங்கு வந்து தங்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை நவம்பர் இரண்டாம் திகதி முதல் டிசம்பர் 3ஆம் திகதி வரை மேற்படி விடுதிகளை முன்பதிவு செய்துகொண்ட சுற்றுலாபயணிகள் அதற்கு பதிலாக எதிர் வரும் மார்ச் 31ஆம் திகதிவரை வந்து தங்க முடியும் எனவும் அதற்குள் திகதிகளை அவர்கள் முடிவு செய்து சுற்றுலா விடுதிகளை பதிவு செய்து கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு வருகை தரும் சுற்றுலா பயணிகள் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றுவது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 12/05/2020 - 09:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை