புலிகளின் வீடியோ பகிர்வு கைதான இருவருக்கு விளக்க மறியல் நீடிப்பு

 

திருகோணமலை- உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வீடியோக்களை வாட்ஸ்அப் ஊடாக மாவீரர் தினத்தன்று பகிர்ந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதிவான் சமிலா குமாரி ரத்னாயக்க முன்னிலையில் இவர்கள் ஆஜர் செய்யப்பட்டபோதே இருவரின் விளக்கமறியல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் திருகோணமலை உவர்மலை பகுதியைச் சேர்ந்த 36 வயது மற்றும் உப்புவெளி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர்களாவர்

சந்தேக நபர்கள் இருவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வீடியோக்களை மாவீரர் தினத்தன்று வாட்ஸ் அப் ஊடாக பகிர்ந்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட உப்புவெளி பொலிஸார் கைது செய்தனர்.

 

ரொட்டவெவ குறூப் நிருபர்

Fri, 12/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை