பெருமளவு இலங்கையர் நேற்று நாடு திரும்பினர்

வெளிநாடுகளில் தங்கியிருந்த பெருமளவிலான இலங்கையர்கள் நேற்று நாடு திரும்பியுள்ளதாக கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்று அதிகாலை கட்டாரிலிருந்து 40 பேரும் பஹ்ரைனிலிருந்து 288 பேரும் கட்டாரிலிருந்து 104 பேரும் நாடு திரும்பியுள்ளனர்.

அத்துடன் நேற்று நண்பகல் அபுதாபியில் இருந்து 54 பேரும் இத்தாலியில் இருந்து 34 பேரும் ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருந்து 56 பேரும் இந்தியாவிலிருந்து 28 பேரும் நாடு திரும்பியுள்ளனர்.

அவ்வாறு நாடு திரும்பியவர்கள் இராணுவத்தினரால் பராமரிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினரால் பராமரிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 6,878 பேர் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 12/09/2020 - 13:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை