பலாலி விமான நிலையம் திறப்பு தொடர்பில் அடுத்த மாதம் ஆராய்வு

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட ஏனைய விமான நிலையங்களின் திறப்பு தொடர்பில் அடுத்த மாதம் நடுப்பகுதியில் ஆராயப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். வெள்ளிக்கிழமை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியதாவது,

ஏற்கனவே இயங்கிக் கொண்டிருந்த கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் வௌ்ளிக்கிழமை சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறக்கப்படவுள்ளது.

ஏனைய விமான நிலையங்கள் இப்போது திறக்கப்படாது.

அவை திறக்கப்படுவது தொடர்பில் அடுத்த மாத நடுப்பகுதியில்தான் ஆராயப்படும் என்றார்.

Tue, 12/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை