நான் அவ்வாறு தெரிவிக்கவில்லை

செய்தியை மறுக்கிறார் ஹக்கீம்

“மௌலானாவின் குற்றச்சாட்டு நியாயமானது என்கிறது மு.கா - ஹக்கீம்” என்ற தலைப்பில் 7ஆம் திகதி “தினகரன்” பத்திரிகையில் முதல் பக்கத்தில் வெளியான செய்தி தவறானது என்றும், தாம் அவ்வாறான எதையும் கூறவில்லையென்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான  ரவூப் ஹக்கீம் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

செய்தியில் குறிப்பிடப்பட்ட இராஜினாமாக் கடிதத்தை உயர்பீடக் கூட்டத்தில் முன்வைத்து கட்சி முக்கியஸ்தர்களுடன் கலந்தாலோசிக்காமல் அதுபற்றி எவ்விதமான முடிவையும் மேற்கொள்வதில்லையென்றும், கருத்து தெரிவிப்பதில்லையென்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். எந்த ஊடகவியலாளரும் இது பற்றி தம்மை தொடர்பு கொள்ளாத நிலையில், தாம் கூறியதாகக் குறிப்பிட்டு இவ்வாறான செய்தியை பொறுப்பு வாய்ந்த பத்திரிகையொன்று வெளியிட்டதையிட்டு தாம் கவலையடைவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரஸ்தாபச் செய்திக்கு அளிக்கப்பட்ட அதேயளவு முக்கியத்துவத்தையளித்து தமது விளக்கத்தை பிரசுரிக்குமாறும் அவர் கேட்டுள்ளார்.

 

Wed, 12/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை