பேலியகொடை புதிய மெனிங் சந்தை இன்று முதல் திறப்பு

பேலியகொடை புதிய மெனிங் சந்தை மொத்த வர்த்தகத்திற்காக இன்று திறக்கப்படும். பிற்பகல் 4.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணிவரை அங்கு வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக மெனிங் வர்த்தக பொது சங்கத்தின் தலைவர் லால் ஹெட்டிகே தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

நெரிசல் இல்லாமல் வர்த்தகத்தை முன்னெடுப்பதற்காக மொத்த விற்பனையாளர்கள் மட்டுமே தங்கள் விவசாய, விளைபொருட்களை அந்த நாளில் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மொத்தமாக அனுப்ப வேண்டாம். சாதாரண அளவை அனுப்புமாறு அனைத்து விவசாயிகளிடமும் கேட்டுக்கொள்கிறோம். எமக்கு அண்மையில் மீன் சந்தை உள்ளதால் குறித்த மொத்த வியாபார நடவடிக்கைகளை மாலை நேரத்தில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Mon, 12/14/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை