பத்து வருடங்களாக பற்றைக்காடாக காட்சியளிக்கும் சிறுவர் பாடசாலை

பல மில்லியனில் அமைக்கப்பட்டு ஒன்றரை வருடங்களே இயங்கியது

வவுனியா - செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வீரபுரம் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள சிறுவர் பாடசாலை கடந்த பத்து வருடங்களாக பற்றைக்காடுகளாக காட்சியளிப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 2009ஆம் ஆண்டளவில் சமூக நலன்சார் தனியார் நிறுவனத்தினால் பல மில்லியன் ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்ட இச்சிறுவர் பாடசாலை செட்டிக்குளம் பிரதேச செயலகத்தின் கீழ் வழங்கப்பட்டது.  ஒன்றரை வருடம் மாத்திரம் குறித்த சிறுவர் பாடசாலையில் கல்வி நடவடிக்கைகள் இடம்பெற்ற போதிலும் அதன் பின்னர் சிறுவர் பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன.

தற்போது அந்த சிறுவர் பாடசாலை பற்றைக்காடாகக் காட்சியளிப்பதுடன் அந்த பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிப்பதாக எமது செய்தியாளர் சுட்டிக்காட்டினார்.

கிளிநொச்சி குறூப் நிருபர்

Wed, 12/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை