மட்டக்களப்பு பொலிஸ் நிலைய விடுதி பகுதியில் முறிந்து விழுந்த மரம்

மட்டக்களப்பு பொலிஸ் நிலைய விடுதி பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் எவருக்கும் எந்த ஆபத்துக்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் காரணமாக மட்டக்களப்பு பொலிஸ் நிலைய விடுதி பகுதியில் உள்ள மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது .

மரம் முறிந்து விழுந்ததில் எந்த அனர்த்தங்களும் ஏற்படாத நிலையில் முறிந்து விழுந்த மரத்தினை அகற்றும் நடவடிக்கையினை மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்பு படை பிரிவு உத்தியோகத்தர்களின் உதவியுடன், மாநகர சபை ஊழியர்கள், பொலிஸார் இணைந்து அகற்றும் நடவடிக்கையினை முன்னெடுத்து முறிந்த மரத்தினை அகற்றியுள்ளனர்.

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)

Fri, 12/04/2020 - 16:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை