அம்பாறை பிரதான வீதியில் திடீரென போக்குவரத்து ஸ்தம்பிதம்

அம்பாறை பிரதான வீதியில் திடீரென போக்குவரத்து ஸ்தம்பிதம்-Traffic Block at Ampara Main Road-Flood

அம்பாறை பிரதான வீதியில் இன்று (07) காலை ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக போக்குவரத்துக்களுக்கு தடை ஏற்பட்டிருந்தது.

காரைதீவு - அம்பாறை வீதி - வளத்தாப்பிட்டி (KA Road - 14th km) பகுதியில் காணப்பட்ட வில்லுக்குளம் உடைந்ததனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இவ்வீதி வெள்ளத்தில் மூழ்கியிருந்நது.

அம்பாறை பிரதான வீதியில் திடீரென போக்குவரத்து ஸ்தம்பிதம்-Traffic Block at Ampara Main Road-Flood

இதனால் கடமைக்குச் செல்லும் ஊழியர்களும் பொதுமக்களும் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்தனர். குறிப்பாக துவிச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள்கள் என்பன வீதியால் பயணம் செய்வது தடைப்பட்டிருந்த போதும், வாகனங்கள் மட்டுமே போக்குவரத்தில் ஈடுபட்டிருந்தன.

அம்பாறை பிரதான வீதியில் திடீரென போக்குவரத்து ஸ்தம்பிதம்-Traffic Block at Ampara Main Road-Flood

மேலும் இவ்வீதியால் பயணித்த டிப்பர் வாகனம் ஒன்று வெள்ளப்பெருக்கு காரணமாக வீதியை விட்டு விலகி குடைசாய்ந்திருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

(நிந்தவூர் குறூப் நிருபர் - சுலைமான் றாபி)

Mon, 12/07/2020 - 17:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை