ஆப்கான் குண்டு தாக்குதல்; காபுலின் பிரதி ஆளுநர் பலி

ஆப்கான் தலைநகர் காபுலின் பிரதி ஆளுநர் மஹ்பூபுல்லாஹ் மொஹபி குண்டு தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று தாம் பயணித்த கார் வண்டியில் குண்டு வைக்கப்பட்டு வெடிக்கச் செய்யப்பட்ட நிலையில் மொஹபியுடன் அவரது செயலாளரும் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.

ஆப்கானில் இடம்பெறும் படுகொலைச் சம்பவங்களின் தொடர்ச்சியாகவே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த மாதத்தில் பணிக்குத் திரும்பும் வழியில் அரச வழக்குத்தொடுநர் ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இதன்போது ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இலக்கு வைக்கப்பட்டு வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்களுக்கு இடையே கடந்த செப்டெம்பர் மாதம் கட்டாரில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் ஆப்கானில் வன்முறைகள் அதிகரித்துள்ளன.

Wed, 12/16/2020 - 13:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை