புறப்படவிருந்த விமானத்தின் சிறகில் ஏறிய ஆடவர் கைது

அமெரிக்காவின் லாஸ் வேகஸ் விமான நிலையத்தில் விமானத்தின் இறக்கையில் ஏறிய ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த அலஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் போர்ட்லன்ட் நகருக்குச் செல்லத் தயாராகிக்கொண்டிருந்தது. அப்போது, விமானத்தை நோக்கி ஆடவர் ஒருவர் வருவதை விமானி பார்த்ததாக சி.என்.என் செய்தி நிறுவனம் கூறியது.

அந்த ஆடவர் தனது காலுறை, காலணிகளை அகற்றிய பின் விமானத்தின் இறக்கையில் ஏறியது விமானத்தில் இருந்த பயணி ஒருவர் எடுத்த வீடியோவில் தெரிந்தது. காவல்துறை அதிகாரிகள் வந்த பின் அவர் இறக்கையிலிருந்து சறுக்கி கீழே விழுந்தார். அவர் மருத்துவ வசதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக சி.என்.என் குறிப்பிட்டது.

அவர் வேலியில் ஏறிக் குதித்து விமான நிலையத்தின் ஓடுபாதை பகுதியினுள் நுழைந்ததாக அங்கிருந்த ஊழியர்கள் குறிப்பிட்டனர். அந்தச் சம்பவத்தால் விமானம் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு தாமதமாக புறப்பட்டது.

Mon, 12/14/2020 - 08:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை