கொரோனா மூன்றாவது அலையை தடுக்க முன்னெச்சரிக்கை அவசியம்

பண்டிகை காலத்தில் கட்டுப்பாடு தேவை என்கிறார் ரோஸி

பண்டிகை காலத்தில் மூன்றாவது அலையைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் கொரோனா நிலைமை நகரசபை அதிகாரிகள், இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் ஓரளவிற்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.

கொழும்பில் நேற்று மேயரின் வேண்டுகோளின் பேரில் கொரியாவின் சியோல் பெருநகர அரசு 18,000 முக்கவசங்களை வழங்கியது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Tue, 12/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை