புரவி புயல் காரணமாக ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையைத் தொடர்ந்து கடந்த 24 மணித்தியாலங்களில் வட மாகாணத்தில் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அதற்கமைய, கிளிநொச்சி, அக்கராயன்குளத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 279.8 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அதற்கு அடுத்தபடியாக வட மாகாணத்தில் சாவகச்சேரி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் ஆகிய பகுதிகளில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று மு.ப. 8.30 வரையான 24 மணித். நாட்டில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவான இடங்கள்
- அக்கராயன்குளம் - 279.8mm
- சாவக்கச்சேரி - 260mm
- யாழ்ப்பாணம் - 260mm
- கிளிநொச்சி - 233.9mm
- முல்லைத்தீவு - 224mm
- ஒட்டுசுட்டான் - 202mm
- பதவி சிறிபுர - 199mm
- உடையார்கட்டு - 190mm
- வெலிஓயா - 186mm
Thu, 12/03/2020 - 13:44
from tkn