- காலி கல்வி வலயத்திற்கு 3 நாள் விடுமுறை
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளுக்கு நாளை (07) திங்கட்கிழமையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண ஆளுநர், திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.
கல்வி அதிகாரிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
'புரவி' புயல் நிலை முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களும் வடமாகாணம் முழுவதும் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டது.
சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை திங்கட்கிழமையும் விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொவிட்-19 பரவல் நிலையைக் கருத்திற்கொண்டு, காலி கல்வி வலயத்திலுள்ள 26 பாடசாலைகளுக்கு நாளை (07) முதல் 3 நாட்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தென்மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் யாபா இவ்வறிவித்தலை விடுத்துள்ளார்.
from tkn