கொழும்பு – கொள்ளுபிட்டியில் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருந்த கட்டடம் ஒன்றின் கீழ்தளம் நீரில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் நேற்று முன்தினம் இரவு பெய்த கடும் மழையினால் கொள்ளுப்பிட்டி – டுப்ளிகேஷன் வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடம் ஒன்றின் கீழ்தளமே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளது.
இதன்போது குறித்த கட்டட நிர்மாணப்பணியில் ஈடுபடுட்டிருந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் குறித்த கட்டடத்தின் கீழ்தளத்தில் மேலும் 5 பேர் சிக்கி இருந்த நிலையில் அவர்கள் நேற்றுக் காலை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Thu, 12/31/2020 - 10:22
from tkn