250,000 பேர் பாதிப்பு, 3,784 பேர் பலி
அமெரிக்காவில் கொவிட்–19 நோய், கட்டுக்கடங்காமல் பரவிவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 250,000க்கும் அதிகமானோரிடம் வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. 3,784 பேர் உயிரிழந்துள்ளனர்.
அவை இரண்டுமே, முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையா கும். அந்தத் தகவல்களை ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டது.
அமெரிக்காவில் கடந்த வாரத்தில் இருந்து 3,000க்கும் அதிகமானோர், ஒரே நாளில் உயிரிழப்பது இது மூன்றாவது முறையாக உள்ளது.
கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் நோய்ப்பரவலின் வேகம் அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் இன்னும் சுமார் 113,000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது அங்கே, தடுப்பூசிகள் போடும் பணி ஆரம்பமாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில், வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 17 மில்லியனை நெருங்கி வருகிறது. 307,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
எனினும் பைசர் மருந்தகம் மற்றும் அதன் ஜெர்மனி நாட்டு கூட்டாண்மையான பயோஎன்டென் நிறுவனம் மேம்படுத்திய தடுப்பு மருந்தின் 2.9 மில்லியன் டோஸ்களை இந்த வார இறுதிக்குள் வழங்கி முடிப்பதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
from tkn