துருக்கியில் சுவாசக் கருவி வெடித்து 9 நோயாளிகள் பலி

தெற்கு துருக்கி மருத்துவமனை ஒன்றில் ஒட்சிசன் சுவாசக் கருவி ஒன்று வெடித்து கொரோனா வைரஸ் நோயாளிகள் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

காசியன்டேப் நகரில் இருக்கும் இந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட தீயே இந்த வெடிப்புக்குக் காரணம் என்று உள்ளூர் ஆளுநரின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றும்போது குறைந்தது ஒரு நோயாளி உயிரிழந்துள்ளார்.

துருக்கியின் கொரோனா தொற்று சம்பவங்கள் இரண்டு மில்லியனை நெருங்கி இருப்பதோடு 17,610 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை காலை ஏற்பட்டு விரைவாக பரவி இருக்கும் இந்தத் தீ விபத்தினால் வேறு எவரும் காயம் ஏற்படவில்லை. இதில் 56 தொடக்கம் 85 வயதுக்கு இடைப்பட்டவர்களே உயிரிழந்ததாக அந்த மருத்துவமனை குறிப்பிட்டுள்ளது. வெடிப்புக்கான காரணத்தை கண்டறிவதற்கான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

Mon, 12/21/2020 - 10:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை