நாட்டில் 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.

கண்டி மாவட்டத்தின் தொலுவ மற்றும் உடுதும்பற பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கும், பதுளை மாவட்டத்தின் கந்தகெட்டிய பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மாத்தளை மாவட்டத்தின் நாவுல மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஆகியவற்றினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை முறையாக பின்பற்றுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Tue, 12/22/2020 - 10:21


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை