கெமரூன் பஸ் விபத்தில் 37 பேர் பலி: பலர் காயம்

கெமரூனின் மேற்கு கிராமமான நெமாலேவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பஸ் விபத்து ஒன்றில் குறைந்த 37 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் 18 பேர் காயமடைந்துள்ளனர்.

70 ஆசனங்கள் கொண்ட அந்த பஸ் வண்டி மேற்கு நகரான பௌபானில் இருந்து தலைநகர் யாவுன்டேவை நோக்கி பயணத்திக் கொண்டிருக்கும்போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணி அளவில் வீதி நடுவில் மக்கள் கூட்டமாக இருந்த நிலையில் அவர்கள் மீது மோதுவதை தவிர்ப்பதற்கு பஸ் வண்டி முயன்றபோதே விபத்து நேர்ந்திருப்பதாக அந்த பகுதிக்கான சிரேஷ்ட அரச அதிகாரியான அப்சலோம் மொனோனோ வோலோ தெரிவித்துள்ளார்.

‘இதில் புத்தாண்டை கொண்டாட வீடுகளுக்குச் செல்லும் அல்லது கிறிஸ்மஸை கொண்டாடிவிட்டு திரும்பும் பயணிகளே அந்த பஸ் வண்டியில் அதிகம் இருந்துள்ளனர்’ என்று அவர் குறிப்பிட்டார்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tue, 12/29/2020 - 12:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை