வீதி விபத்தில் 32 வயது தாயும் 3 1/2 வயது குழந்தையும் பலி

வீதி விபத்தில் 32 வயது தாயும் 3 1/2 வயது குழந்தையும் பலி-32 Yr Old Mother And 3and Half Yr Old Child Killed in Accident-Anuradhapura

- 11 பேர் பயணித்த கெப் வாகனத்தில் 8 பேர் கைது
- சாரதி உட்பட 3 பேர் தப்பியோட்டம்

பாதெனிய - அநுராதபுரம் வீதியில், பஹல பலல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 32 வயதான தாய் ஒருவரும் அவரது 3 1/2 வயது குழந்தை ஒன்றும் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (15) பிற்பகல் 6.30 மணியளவில், பாதெனிய திசையிலிருந்து அநுராதபுரம் திசையில் பயணித்த கெப் வானமொன்று, வீதியோரமாக நடந்து சென்ற தாய் மற்றும் குழந்தை மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த குறித்த பெண் மற்றும் அவரது குழந்தை ஆகிய இருவரும், மஹவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவரும் மரணமடைந்துள்ளனர்.

இவ்விபத்தில் மரணமடைந்தவர்கள் பலல்ல பிரதேசத்தின், பஹல பலல்ல பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்விபத்தின்போது, வாகனத்தில் 11 பேர் பயணித்துள்ளதோடு, கெப் வாகனத்தின் சாரதி உள்ளிட்ட மூவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், ஏனைய 8 பேரும் பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவர்கள் பயணித்த வாகனத்தில், பல வெற்று பியர் தகரப் பேணிகள் காணப்பட்டதாக, அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, மஹவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Wed, 12/16/2020 - 14:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை